காஞ்சிபுரத்தில் சாம்சங் ஊழியர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைளை வைத்து கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு சாம்சங் ஊழியர்களுக்கு இன்று ஆதரவு தெரிவிக்க வருகை தர உள்ளனர்.
இதனிடையே நேற்று நள்ளிரவு சாம்சங் ஊழியர்களை வீடு புகுந்து போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அனைவரையும் பிணையில் விடுவித்துள்ளனர்.
இதையும் படியுங்க: 2 மனைவிகள் இருந்தும் பத்தாது… 14 வயது சிறுமியை 3வதாக திருமணம் செய்த ‘கல்யாண ராமன்’ : குமரியில் ஷாக்!
எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்னர் என்ற விபரங்களை வெளியிட ண்டும் என சக ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதே சமயம் நேற்று நள்ளிரவு போராட்டத்துக்காக அமைக்கப்பட்ட பந்தல்களும் கலைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிபிஎம் தலைவர் கனகராஜ், தனது எக்ஸ் தள பக்கத்தில் சாம்சங் தொழிலாளர்கள் சங்கத் தலைவர்களை நள்ளிரவில் கைது செய்தது ஏன்? அப்படி என்ன நடந்துவிட்டது, எமர்ஜென்சியா? முன்னெப்போதும் இல்லாத வகையில் சோதனை என குறிப்பிட்டுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.