சனாதனப் பண்டிகை கார்த்திகை தீபத்திருநாள்… திமுகவினரை உரசிய் ஹெச் ராஜாவின் வாழ்த்து!!!
கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.
கார்த்திகை தீப திருநாளுக்கான புராணமாக, சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
அன்று அதிகாலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்.
இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என கூறப்படுகிறது. இன்று அதிகாலை திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது; மாலையில் மகா தீபம் ஏற்றப்படும்.
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு பாஜக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கார்த்திகை தீபத் திருநாளான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு பாஜக சார்பாக அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்த்திகை தீபங்கள் அனைவரின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்யட்டும். அனைவர் இல்லங்களையும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நிரப்பட்டும். இறைவன் அருள் இந்த கார்த்திகை தீபத்திருநாளில் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா, அனைவருக்கும் சனாதன பண்டிகையாம் கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த கார்த்திகை தீபத்திருநாளில் அனைவரது இல்லங்களிலும் இருள் நீங்கி ஒளி பெற்றிட இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். சனாதன தர்மத்தை ஒழிப்போம் என திமுகவினர் பேசி வரும் நிலையில் கார்த்திகை தீப திருநாளை சனாதன பண்டிகை என குறிப்பிட்டு ஹெச்.ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
This website uses cookies.