தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை மற்றும் மதுபான விற்பனை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக கஞ்சா போதைக்கு அடிமையாகும் மாணவர்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், எனவே, காவல்துறையினர் உடனடியாக கஞ்சா புழக்கத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இதனிடையே, மாணவர் ஒருவர் பள்ளி சீருடையிலே தலைக்கேறிய மது போதையில் தள்ளாடியபடி சாலையில் தள்ளாடி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், திமுக அரசு செயல்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்? பேராசை, ஊழல் மற்றும் தவறான நிர்வாகமே அனைத்தும் இணைந்தது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.