சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகள் வாயுக்கசிவு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் உள்ள திருவொற்றியூரில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றில், இன்று (அக்.25) பிற்பகல் ஏற்பட்ட வாயுக் கசிவால், அப்பள்ளியில் படித்து வரும் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென மயக்கம் அடைந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட மாணவிகள், அங்கிருந்த வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும், இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர், உடனே பள்ளியின் முன்பு கூடத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. திருப்பதி பக்தர்கள் அதிர்ச்சி!
ஆனால், அங்கு வந்த பெற்றோர், இன்று காலை 10 மணி முதல் வாயுக்கசிவு வெளியேறியுள்ள நிலையில், அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பள்ளி வளாகத்தில் தீயணைப்புத் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.