புதுக்கோட்டை அருகே 3 மாத ஊதியத்தை வழங்காததால் ஆத்திரமடைந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை, வட்டாரக் கல்வி அலுவலகத்தை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த தைலம்மை, மணமேல்குடி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிகாரிகள் இவருக்கு ஊதியத்தை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியை தைலம்மை மணமேல்குடியிலுள்ள வட்டார கல்வி அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த கணிணி உள்ளிட்ட பொருட்களை கீழேத்தள்ளி உடைத்துள்ளார். மேலும், அங்கிருந்த ஆவணங்களை தூக்கியெறிந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், அங்கிருப்பவர்களை வேலை செய்யக் கூடாது என மிரட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வட்டாரக்கல்வி அலுவலர்கள் சார்பில் மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டார்.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.