அந்தர்பல்டி அடித்த விஜயலட்சுமி…. ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் சீமான் : காத்திருக்கும் ட்விஸ்ட்!!

அந்தர்பல்டி அடித்த விஜயலட்சுமி…. ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் சீமான் : காத்திருக்கும் ட்விஸ்ட்!!

நடிகை விஜயலட்சுமி, சீமானுடன் வாழ்த்துகள் எனும் படத்தில் நடித்த போது காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு அவர் கயல்விழி என்ற வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் பலமுறை விஜயலட்சுமி புகாராக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். சீமானை ஜெயிலுக்கு அனுப்பாமல் நான் சென்னையை விட்டு கிளம்ப மாட்டேன் என கூறியிருந்தார். இதன் எதிரொலியாக நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சீமான் மீது பொய் புகார் அளித்ததாக கூறி விஜயலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் ஆபாசமாக விமர்சித்திருந்தனர். மேலும் சீமானிடம் விஜயலட்சுமி புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் ஒரு கேவலம் என்றும் வேங்கைவயல் விவகாரம் போல் என் மீது கழிவ ஏன் கரைக்குறீங்க என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார். சீமான் பேசும் ஒவ்வொரு பதிலடிக்கும் நடிகை விஜயலட்சுமி ஒருமையிலும் ஆபாசமாகவும் பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் வீடியோவில் கூறுகையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர்கள் போரில் இறந்து கொண்டிருந்த போது சீமான் என்னுடன்தான் இருந்தார் என விஜயலட்சுமி கூறியிருந்தார். இந்த நிலையில் சீமானிடம் விசாரணை நடத்த இரு முறை வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் அவர் செப்டம்பர் 18ஆம் தேதி ஆஜராவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குள் திடீர் டிவிஸ்ட்டாக நேற்று முன் தினம் நள்ளிரவில் சீமான் மீது கொடுத்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் வாங்கிக் கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சீமானும் விஜயலட்சுமியும் சமாதானம் ஆனதாக கூறப்படும் நிலையில் வீரலட்சுமியும் சீமானும் , வீரலட்சுமியும் விஜயலட்சுமியும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டனர் சீமான் என்னதான் இருந்தாலும் அவர் என்னுடைய எதிரி அல்ல, அவர் என் கணவர், அவருடன் சில காலம் வாழ்ந்துள்ளேன். அவரை நான் கணவனாகத்தான் நினைக்கிறேன், நான் அவருடன் பேசிவிட்டேன். தற்போது புகாரை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.

நான் சீமானிடம் காசு வாங்கவில்லை என்றார். விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற்றுவிட்ட நிலையில் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் காவல் துறையினரோ சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.

அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றார். இதனிடையே வீரலட்சுமி தன்னை அவதூறாக பேசி வருவதால் அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது இன்று காலை 10 மணிக்கு வழக்கறிஞர் சங்கருடன் சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகிறார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!

ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…

15 hours ago

எழுதுனது வேற ஒருத்தருக்கு! ஆனா நடிச்சது வேற ஒருத்தர்- கார்த்திக் சுப்பராஜ் சொன்ன சீக்ரெட்?

கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

15 hours ago

மாப்பிள்ளையின் செல்போனுக்கு வந்த மணப்பெண்ணின் உல்லாச வீடியோ… அதிர்ந்து போன இருவீட்டார்!

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…

16 hours ago

கேங்கர்ஸ் கிளைமேக்ஸில் சுந்தர் சி வைத்த பலே டிவிஸ்ட்! இப்பவே இப்படி ஒரு பிளான் ஆ?

வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…

16 hours ago

கட்டு கட்டாக சிக்கிய பணம்.. ரூ.35 லட்சம் பறிமுதல்.. கோவையில் பகீர் சம்பவம்!

கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…

17 hours ago

நல்லா இருக்கு ஆனா வேண்டாம்- வடிவேலுவை அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர்!

எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…

17 hours ago

This website uses cookies.