அந்தர்பல்டி அடித்த விஜயலட்சுமி…. ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் சீமான் : காத்திருக்கும் ட்விஸ்ட்!!

அந்தர்பல்டி அடித்த விஜயலட்சுமி…. ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் சீமான் : காத்திருக்கும் ட்விஸ்ட்!!

நடிகை விஜயலட்சுமி, சீமானுடன் வாழ்த்துகள் எனும் படத்தில் நடித்த போது காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு அவர் கயல்விழி என்ற வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் பலமுறை விஜயலட்சுமி புகாராக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். சீமானை ஜெயிலுக்கு அனுப்பாமல் நான் சென்னையை விட்டு கிளம்ப மாட்டேன் என கூறியிருந்தார். இதன் எதிரொலியாக நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சீமான் மீது பொய் புகார் அளித்ததாக கூறி விஜயலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் ஆபாசமாக விமர்சித்திருந்தனர். மேலும் சீமானிடம் விஜயலட்சுமி புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் ஒரு கேவலம் என்றும் வேங்கைவயல் விவகாரம் போல் என் மீது கழிவ ஏன் கரைக்குறீங்க என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார். சீமான் பேசும் ஒவ்வொரு பதிலடிக்கும் நடிகை விஜயலட்சுமி ஒருமையிலும் ஆபாசமாகவும் பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் வீடியோவில் கூறுகையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர்கள் போரில் இறந்து கொண்டிருந்த போது சீமான் என்னுடன்தான் இருந்தார் என விஜயலட்சுமி கூறியிருந்தார். இந்த நிலையில் சீமானிடம் விசாரணை நடத்த இரு முறை வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் அவர் செப்டம்பர் 18ஆம் தேதி ஆஜராவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குள் திடீர் டிவிஸ்ட்டாக நேற்று முன் தினம் நள்ளிரவில் சீமான் மீது கொடுத்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் வாங்கிக் கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சீமானும் விஜயலட்சுமியும் சமாதானம் ஆனதாக கூறப்படும் நிலையில் வீரலட்சுமியும் சீமானும் , வீரலட்சுமியும் விஜயலட்சுமியும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டனர் சீமான் என்னதான் இருந்தாலும் அவர் என்னுடைய எதிரி அல்ல, அவர் என் கணவர், அவருடன் சில காலம் வாழ்ந்துள்ளேன். அவரை நான் கணவனாகத்தான் நினைக்கிறேன், நான் அவருடன் பேசிவிட்டேன். தற்போது புகாரை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.

நான் சீமானிடம் காசு வாங்கவில்லை என்றார். விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற்றுவிட்ட நிலையில் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் காவல் துறையினரோ சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.

அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றார். இதனிடையே வீரலட்சுமி தன்னை அவதூறாக பேசி வருவதால் அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது இன்று காலை 10 மணிக்கு வழக்கறிஞர் சங்கருடன் சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகிறார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

9 seconds ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

1 hour ago

அதிரடியாக பெயரை மாற்றிய பிரபல நடிகர்..படத்தின் டீசரை கவனித்தீர்களா.!

புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…

2 hours ago

யார் அந்த ரம்யா… இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை வறுத்தெடுக்கும். நெட்டிசன்கள்.!

ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்…

2 hours ago

அஜித்திற்கு என்ன ஆச்சு…விபத்தில் சிக்கிய கார்..பதறவைக்கும் வீடியோ.!

விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…

17 hours ago

துறவி பாதையை கையில் எடுத்த தமன்னா… மகா கும்பமேளாவில் நடந்த ட்விஸ்ட்.!

கும்பமேளாவில் தமன்னா தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா,இந்த…

18 hours ago

This website uses cookies.