சிவகங்கை: மெரினா கடலில் பேனா சிலையை வைக்க திமுக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- மெரினா கடலில் பேனா சிலை அமைப்பதை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரின் கருத்தை வரவேற்கின்றேன். கடல் கட்சிக்கோ, கட்சியின் தலைமைக்கோ சொந்தமானது அல்ல. கடல் பொது சொத்து.
கடலுக்குள் சிலை அமைப்பதை அறிவார்ந்த சமுகம் செய்யாது. தொலை நோக்கு பார்வையுள்ள தலைவன் சிந்திக்க வேண்டும். பேனா சிலையை அண்ணா அறிவாலயம், அண்ணா நூலகம், கலைஞர் நினைவிட்டத்தில் வைக்கலாம். கடலுக்குள் வைப்பதை அனுமதிக்க மாட்டோம்.
எனது கை பூ பறிக்குமா? புலியங்காய் பறிக்குமா? என்று சேகர் பாபு பழைய வசனங்களை பேசி வருகின்றார். ஈரோடு இடைத்தேர்தலை நாங்கள் வலிமையாக எதிர்கொள்கின்றோம். உறுதியாக வெல்வோம்.
இலங்கை அகதிகள் மீண்டும் இந்தியா வருவது அங்கு தமிழர்கள் வாழமுடியாத சூழல் நிலவுவதை காட்டுகின்றது. திபத்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் அரசு, இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை தர மறுக்கின்றது. இலங்கை பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழ சோசியலீச குடியரசு மலர்வது தான் ஒரே தீர்வு, என தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.