சென்னை : கோவையில் தேர்தலுக்காக ஒட்டப்பட்ட போஸ்டரில் கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படம் இடம்பெற்ற நிலையில், திருமாவளவன் புகைப்படம் மட்டும் ஏன் புறக்கணிக்கப்பட்டது ..? என திமுகவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை – சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- 50 ஆண்டு காலமாக திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்தாலும், வெள்ளம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. துணிப்பையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமெனில் மஞ்சப்பைதான் கொண்டு வரனுமா..? பச்சைப் பை கொண்டுவரக் கூடாதா..? இதற்கு முதலில் பாலீத்தீன், பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்தாலே, துணிப்பை கலாச்சாரம் தானாக மேலோங்கும்.
நல்லாட்சி என்பது சட்டவிதிகளை மதிப்பது என்பதுதான். அதனை நீங்கள் செய்கிறீர்களா..? எனது தம்பிகளை கடத்தி 3 நாட்களுக்கு மேலாக வைத்து மிரட்டுகிறீர்கள். இதுதான் உங்களின் நல்லாட்சியா..? ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் 8 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளனர். இதற்கு நான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன்.
விஜய் மக்கள் இயக்கம், நாம் தமிழர் கட்சியுடன் போட்டி எல்லாம் இல்லை. விஜய் எனது தம்பி. எங்களின் இருவருடைய கோட்பாடும் வேறு. எனக்கு ரூ.1,800 கோடி சொத்து இருப்பதாகக் கூறுபவர்கள், அது எங்கிருந்து வந்தது என்றும் கூற வேண்டும். எனது வீட்டிலும் சோதனை செய்துவிட்டு, பாஜக பணத்தை எடுத்துச் செல்லட்டும். தலித் இஸ்லாமிய கூட்டமைப்பு வைத்த திருமாவளவன், இஸ்லாமியர் சிறையில் உள்ளதை குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேபோல் தேர்தலின்போது சிதம்பரத்தில் மட்டும் திருமாவளவனுக்கு பேச அனுமதி மற்ற இடங்களில் பேச வாய்ப்பளிக்கவில்லை.
கோவையில் தேர்தலுக்கான சுவரொட்டியில் அனைத்து கட்சி தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்ற நிலையில், திருமாவளவன் உருவப்படம் மட்டும் இடம்பெறவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 65 சதவீத இடங்களில் மட்டுமே நாங்கள் போட்டியிடுகிறோம், என்று கூறினார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.