பாலியல் குற்றம் செய்ததை ஜோதிமணி பார்த்தாரா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக காங்கிரஸ் கட்சியினருக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மோதல் ஏற்பட்டது. பேரறிவாளனின் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது குறித்து சீமான் கடுமையாக விமர்சித்தார். மேலும், காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரியின் பேச்சையும் விமர்சித்து பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினரும் சீமானுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என ஜோதிமணி விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக முத்துநகர் படுகொலை என்ற ஆவணப்படத்தை படக்குழுவினருடன் சீமான் பார்த்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தூத்துக்குடி துப்பாக்கி சூடு மூலமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. எவராவது கைக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு கலவரத்திற்கு வருவார்களா? அப்படி குழந்தைகளுடன் அறவழியில் போராட வந்தவர்கள்தான் போலீஸ் சுட்டுத் தள்ளியது. பேருந்தை கொளுத்தியது, பின்னர் கலவரத்தை செய்தது காவல்துறை தான்.இதே நாம் தமிழர் ஆட்சியாக இருந்தால் யாராக இருந்தாலும் விட்டிருக்க மாட்டோம், என்றார்.
அப்போது, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பாலியல் குற்றவாளி என விமர்சித்ததை பற்றி கேள்வி எழுப்பியதற்கு சீமான் பதிலளித்ததாவது :- சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து இந்திய ராணுவம் தமிழ்ப் பெண்களை வன்புணர்வு செய்து கொன்றது. அதற்கு காரணமாக இருந்தவர் பாலியல் குற்றவாளிகள் ராஜீவ் காந்திதான். ஏன் அதைப் பற்றி எல்லாம் ஜோதிமணி பேசவில்லை.
நான் பாலியல் குற்றம் செய்தேன் என்பதை ஜோதிமணி பார்த்தாரா? உங்களை தங்கச்சி என்பதைத் தவிர வேறு கூறவில்லை. பாலியல் குற்றவாளி உங்க ஆளு ராஜீவ்காந்தி தான் என காட்டமாக விமர்சித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.