சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் குறித்து வழக்குப்போட்டது தேவையில்லாதது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மீஞ்சூர் பொதுகூட்டத்தில் பேசிய நாம் தமிழர் சீமான், திராவிடர்களுக்கும், தங்களுக்கும் நடக்கும் சண்டை பங்காளி சண்டை என்றும், நாட்டை நாசமாக்கியவர்கள் காங்கிரஸ் மறறும் பாஜகவினர் என்று கூறினார்.
மேலும், அரசு பணத்தில் சமாதி கட்டுவதாகக் கூறிய அவர், இடிந்த வீடுகளை வீடுகளை கட்ட முடியாமல் இருக்கும் நிலையில் சமாதிகளுக்கு ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்..? என்றும், வந்தவன் போனவன் எலோருக்கும் சிலை உள்ளதாகவும், அனைத்தையும் பெயர்த்து கடலில் தூக்கி போடுவேன் என்று தெரிவித்தார்.
வஉசி திருவுருவ சிலையை சென்னையில் நிருவுவேன் என்று கூறிய சீமான், தமிழர்களுடைய அடையாளங்களை திட்டமிட்டு அழிப்பது கொடுமை என்றும், தமிழர் அல்லாதவர்களை தமிழுக்காக தொண்டு செய்தார்கள் உழைத்தார்கள் என அடையாளப்படுத்துவது கொடுமை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சீமானுக்கு ஓட்டு போட்டால் பாஜக வந்துவிடும் என கூறியவர்கள், வீடு திறப்பு விழாவிற்கு மோடியையும், சிலை திறப்புக்கு வெங்கையா நாயுடுவை நானா கூட்டி வருகிறேன் என்ற அவர், தமிழர்கள் ஒன்றாக இருந்திருந்திருந்தால் தமிழர் அல்லாதவர்கள் தமிழகத்தை ஆளமுடிந்திருக்காது என்றும், ஓநாய்களாக திராவிடரா்கள் திரிகிறார்கள், என தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது :- திமுகவின் திராவிட அரசியல் என்து செயல் அரசியலோ, சேவை அரசியலோ அல்ல. அது வெறும் செய்தி அரசியல்தான். இளையராஜாவை வைத்து பாஜகு அரசியல் செய்கிறது. இளையராஜாவுக்கு அவரது மகன் யுவன்சங்கர் ராஜாவே ஓட்டுப்போட மாட்டார், என தெரிவித்தார்.
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
This website uses cookies.