தமிழகத்தில் வடமாநிலத்தவர் எண்ணிக்கை நாளுக்கு அதிகரிக்க காரணம் யார் என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 2000 பேர் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகியோர், நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சல்மான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய சீமான் , இஸ்லாமியத்தை எதிர்ப்பதே பாஜகவின் ஒரே கோட்பாடு என தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி மத்திய, மாநில அரசுகளுக்கு இடையூறாக உள்ளது என அவர்கள் நினைப்பதாகவும், அது உண்மைதான் எனவும் எனக் கூறிய அவர், நான் இருக்கும் வரை எட்டு வழி சாலை, பரந்தூர் விமான நிலையம் பேனாச்சின்னம் உள்ளிட்ட எதையும் அமைக்க முடியாது என தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கான அரசாக தற்போதைய தமிழக அரசு செயல்படவில்லை என்ன கடுமையாக குற்றம் சாட்டி பேசிய அவர், வட மாநிலத்தவரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்ததற்கு காரணம் திராவிட இயக்கங்கள் தான் என்றும், வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பே, தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் என தெரிவித்தார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.