அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதை எதிர்த்த வழக்குகளின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அறிவித்தது.
தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் உள்ளிட்ட 3 பேர் ,செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 2 ஆண்டுகளுக்குக் குறைவாகத் தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் என்பதால் எதன் அடிப்படையில் தகுதி இழப்பு..?, எந்த சட்டப்பிரிவில் செந்தில் பாலாஜி தகுதி இழப்புக்கு ஆளாகிறார் ? என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.
ஒரு மாதத்துக்கு மேல் காவலில் உள்ள ஒருவர் எப்படி அமைச்சராகத் தொடர முடியும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், தமிழக அரசு தரப்பு வாதங்களுக்காக விசாரணையைச் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.