13 மாதங்களில் 9 கொலை: நடுத்தர வயது பெண்களை குறிவைக்கும் சைக்கோ: சீரியல் கில்லர் சிக்கியது எப்படி…..!!

உத்திரபிரதேசம் பரேலி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடுத்தர வயது பெண்களை குறிவைத்து தொடர் கொலைகளில் ஈடுபட்ட சீரியல் கில்லரை போலீசார் கைது செய்தனர்.

ஆரம்பத்தில், இதே மாதிரியான முறையில் நடந்த ஒன்பது கொலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளியின் வரைபடம் மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் ஆய்வு செய்தல் மற்றும் மொபைல் டேட்டாவை ஆய்வு செய்தல் உள்ளிட்ட தீவிர நடவைக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

“2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், முக்கியமாக பரேலி மாவட்டத்தின் ஷாஹி மற்றும் ஷீஷ்கர் பகுதிகளில், வனப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வெறிச்சோடிய இடங்களில் ஆறு நடுத்தர வயது பெண்கள் அவர்கள் அணிந்திருந்த புடவையால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கண்காணிப்பு குழு சுமார் 1.5 லட்சம் மொபைல் எண்களில் இருந்து தரவுகளை பகுப்பாய்வு செய்தது மற்றும் அருகிலுள்ள கிராமங்களின் வாக்காளர் பட்டியலில் இருந்து சந்தேகத்திற்கு இடமான தனிநபர்களை கண்காணித்தது.

போலீசார் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து அதற்கு “ஆபரேஷன் தலாஷ்” என்று பெயரிட்டனர்.

அத்தகைய குற்றவாளிகளின் நடத்தையைப் புரிந்து கொள்ள மருத்துவ உளவியல் நிபுணர்களுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது..

தீவிர தேடுதல் வேட்டையில் குல்தீப் குமார் எனும் சீரியல் கொலையாளி கைது செய்யப்பட்டான்.பகர்கஞ்ச் சானுவா கிராமத்தில் வசிப்பவர் என்று மூத்த அதிகாரி கொலையாளி கிராம பகுதிகளில் உள்ள பெண்களை குறிவைத்து, முதலில் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தி மறுக்கும் பெண்களை கழுத்தை நெரித்து கொன்றுள்ளான்.

குல்தீப் குமாரின் சிறுவயதிலேயே அவனுடைய பெற்றோர் இறந்தனர் மாற்றாந்தாய் நடத்தையால் பாதிக்கப்பட்டு அவரை கொல்ல முயன்றான்.இது பெண்கள் மீதான கோபத்தை வளர்த்து, அவரை ஒரு தொடர் கொலையாளியாக மாற்றியது.

“பாதிக்கப்பட்ட அனைவரும் நடுத்தர வயது பெண்கள்,குமாருக்கு தனிப்பட்ட வாகனம் இல்லை, பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி, கால்நடையாகப் பயணம் செய்தார் என்று பரேலி காவல்துறைத் அதிகாரி தெரிவித்தார்.

“தனியாக இருக்கும் மற்றும் அடிக்கடி மொபைல் போன்களைப் பயன்படுத்தாத பெண்களை அவர் குறிவைத்தார், இது அவரைப் பிடிக்க தாமதமானது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sudha

Recent Posts

அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…

52 minutes ago

கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!

விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…

59 minutes ago

கொரியன் படத்தின் காப்பியா GOOD BAD UGLY.? பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படத்தின் ரீமேக்?

விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…

1 hour ago

திமுகவுக்கு ‘இது’தான் முக்கியமானது.. கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!

திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…

2 hours ago

மாயமான +2 மாணவியை பொதுத் தேர்வு எழுத வைத்த காவலர்… நெகிழ வைத்த கோவை சம்பவம்!

கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…

2 hours ago

This website uses cookies.