13 மாதங்களில் 9 கொலை: நடுத்தர வயது பெண்களை குறிவைக்கும் சைக்கோ: சீரியல் கில்லர் சிக்கியது எப்படி…..!!

உத்திரபிரதேசம் பரேலி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடுத்தர வயது பெண்களை குறிவைத்து தொடர் கொலைகளில் ஈடுபட்ட சீரியல் கில்லரை போலீசார் கைது செய்தனர்.

ஆரம்பத்தில், இதே மாதிரியான முறையில் நடந்த ஒன்பது கொலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளியின் வரைபடம் மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் ஆய்வு செய்தல் மற்றும் மொபைல் டேட்டாவை ஆய்வு செய்தல் உள்ளிட்ட தீவிர நடவைக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

“2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், முக்கியமாக பரேலி மாவட்டத்தின் ஷாஹி மற்றும் ஷீஷ்கர் பகுதிகளில், வனப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வெறிச்சோடிய இடங்களில் ஆறு நடுத்தர வயது பெண்கள் அவர்கள் அணிந்திருந்த புடவையால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கண்காணிப்பு குழு சுமார் 1.5 லட்சம் மொபைல் எண்களில் இருந்து தரவுகளை பகுப்பாய்வு செய்தது மற்றும் அருகிலுள்ள கிராமங்களின் வாக்காளர் பட்டியலில் இருந்து சந்தேகத்திற்கு இடமான தனிநபர்களை கண்காணித்தது.

போலீசார் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து அதற்கு “ஆபரேஷன் தலாஷ்” என்று பெயரிட்டனர்.

அத்தகைய குற்றவாளிகளின் நடத்தையைப் புரிந்து கொள்ள மருத்துவ உளவியல் நிபுணர்களுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது..

தீவிர தேடுதல் வேட்டையில் குல்தீப் குமார் எனும் சீரியல் கொலையாளி கைது செய்யப்பட்டான்.பகர்கஞ்ச் சானுவா கிராமத்தில் வசிப்பவர் என்று மூத்த அதிகாரி கொலையாளி கிராம பகுதிகளில் உள்ள பெண்களை குறிவைத்து, முதலில் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தி மறுக்கும் பெண்களை கழுத்தை நெரித்து கொன்றுள்ளான்.

குல்தீப் குமாரின் சிறுவயதிலேயே அவனுடைய பெற்றோர் இறந்தனர் மாற்றாந்தாய் நடத்தையால் பாதிக்கப்பட்டு அவரை கொல்ல முயன்றான்.இது பெண்கள் மீதான கோபத்தை வளர்த்து, அவரை ஒரு தொடர் கொலையாளியாக மாற்றியது.

“பாதிக்கப்பட்ட அனைவரும் நடுத்தர வயது பெண்கள்,குமாருக்கு தனிப்பட்ட வாகனம் இல்லை, பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி, கால்நடையாகப் பயணம் செய்தார் என்று பரேலி காவல்துறைத் அதிகாரி தெரிவித்தார்.

“தனியாக இருக்கும் மற்றும் அடிக்கடி மொபைல் போன்களைப் பயன்படுத்தாத பெண்களை அவர் குறிவைத்தார், இது அவரைப் பிடிக்க தாமதமானது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sudha

Recent Posts

என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!

சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…

7 minutes ago

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

14 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

15 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

15 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

15 hours ago

This website uses cookies.