நள்ளிரவில் அதிர்ச்சி.. பாஜக பிரமுகர் அதிரடி கைது : ஆக்ஷனில் இறங்கிய டெல்லி மேலிடம்!!!
தூத்துக்குடி மாநகரில் உள்ள புது கிராமம் பகுதியை சேர்ந்தவர் செளந்திரராஜன் இவரது மகன் ஜான் ரவி (52), தொழிலதிபர். இவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் திமுகவினர் மற்றும் முதல்வரை விமர்சனம் செய்து வருவார்..
இந்நிலையில், கடந்த தினத்தில் இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் திமுக ஆட்சியை குறை சொல்வது, தமிழக முதல்வர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பெரியார் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
இதில் பெரியார் குறித்து தகாதவாறு பதிவு செய்துள்ளார்.. இந்த நிலையில், மதுரை சைபர் கிரைம் போலீசார் சொந்த ஊரான தூத்துக்குடி புது கிராமத்தில் உள்ள இவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.
(153A) மதம், இனம், ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், (504) சமூகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளுதல், (505 1b) வதந்தியை பரப்புதல் ஆகிய பிரிவுகளில் கைது செய்துள்ளனர்..
மேலும், இவர் தனது தந்தை இறந்து சில நாட்களே ஆன நிலையில், 16ம் நாள் காரியம் செய்வதற்கு தூத்துக்குடி வந்துள்ளார். அப்போது தான் போலீசை இவரை கைது செய்தனர். மேலும், இவரை மதுரை மேஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார்…
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே போன்று சமூக வலைதளத்தில் முதல்வர் குறித்து தவறான தகவல் பதிவிட்டதால் குஜராத்திற்கு சென்று இவரை கைது செய்தது தமிழக போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ள பாஜக தேசிய தலைமை புதிய குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவானது தொடர்ச்சியாக எந்த காரணத்திற்காக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுகிறார்கள் என ஆய்வு செய்து கட்சி தலைமைக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
அந்த குழுவில் முன்னாள் கர்நாடக முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா, எம்பியும், மும்பையின் முன்னாள் காவல் கண்காணிப்பாளருமான சத்ய பால் சிங், ஆந்திரா பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, எம்பி பி.சி. மோகன் ஆகியோர் உள்ளனர். இந்த குழு பற்றிய விவரத்தை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டு இருந்தார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.