சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல : ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதில்..!!

சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு, நாங்கள் சளைத்தவர்கள் அல்ல : ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதில்..!!

மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்துகிறது என்று ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு படித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. முன்னதாக, சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்என் ரவிக்கு மரபுப்படி காவல்துறை மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், உரை நிகழ்த்திய ஆளுநர் அர்என் ரவி, தமக்கு அளிக்கப்பட்டுள்ள உரையில் உள்ள கருத்துக்களுடன் முரண்படுவதாகக் கூறி உரையை படிக்க மறுத்தார். இதைத் தொடர்ந்து, ஆளுநர் படிக்காத பகுதிகளை சபாநாயகர் அப்பாவு படிக்கத் தொடங்கினார்.

அதில் இடம்பெற்றிருப்பதாவது :- இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை விட தமிழகத்தின் வளர்ச்சி வேகம் அதிகம். அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் முகவரியாக தமிழகம் உள்ளது. சரக்கு சேவை வரிக்கான இழப்பீட்டை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும். சென்னையில் மெட்ரோ 2வது கட்ட திட்டப்பணிக்களுக்கு முழு செலவினமும் தமிழக அரசின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெட்ரோ திட்டப்பணிகளுக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கி நிதியுதவி வழங்க வேண்டும்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.24,926 கோடி சுய உதவி குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்துகிறது.

மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். இல்லம் தேடி கல்வி திட்டம் 1.65 லட்சம் மையங்களில் நடைபெறுகிறது ; இதன்மூலம் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள். இந்த ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்வு. 2.17 லட்சம் பேர் இன்னுயுர் காப்போம் திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.

சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4.671 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலான வளர்ச்சியை கொண்டு வர அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது, எனக் கூறினார்.

தொடர்ந்து, ஆளுநர் படிக்காத உரையை வாசித்து முடித்த சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் குறைவாக வாசித்ததை நான் குறைவாக கருதவில்லை என்றும், ஒவ்வொருவருக்கும் இருக்கும் கருத்துக்களை சொல்ல, இந்த அவை ஏற்ற இடம் அல்ல எனக் கூறினார். மேலும், சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு, நாங்கள் சளைத்தவர்கள் அல்ல எனக் கூறிய அவர், பிரதமர் வெள்ள நிவாரண நிதியில் இருந்து 50 ஆயிரம் கோடியை வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

47 minutes ago

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

1 hour ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

14 hours ago

சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!

பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…

15 hours ago

தோனி சிக்ஸர் ரொம்ப முக்கியமா..கோட்டை விடும் CSK..முன்னாள் வீரர் காட்டம்.!

CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…

16 hours ago

இது தானா..எதிர்பார்த்த நாளும் இதுதானா..நடிகை திரிஷா போட்டோ வைரல்..ரசிகர்கள் வாழ்த்து.!

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…

17 hours ago

This website uses cookies.