பெண்ணின் முகத்தில் ஸ்ப்ரே அடித்து தங்க சங்கிலி அபேஸ்: கையும் களவுமாக மாட்டிய நூதன திருடி..!!

கோவை: கோவையில் கிஃப்ட் வாங்குவது போல் நடித்து பெண்ணின் முகத்தில் கரப்பான் பூச்சி மருந்தை அடித்து செயினை திருட முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மனைவி செல்வராணி (57). இவர்கள் அதே பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் அருகே பேன்சி கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை செல்வராணி மட்டும் கடையில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது கிஃப்ட் வாங்குவது போல் பெண் ஒருவர் வந்தார். செல்வராணியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்த அந்த பெண் திடீரென கரப்பான் பூச்சி ஸ்பிரேவை எடுத்து செல்வராணியின் முகத்தில் அடித்தார். பதறிப்போன செல்வராணி கூச்சலிட்டார். அதற்குள் அந்த பெண் செல்வராணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு கடையில் இருந்து வெளியே ஓடினார்.

செல்வராணி மீண்டும் கூச்சலிடவே ஓட முயன்ற அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்தனர். மேலும், இதுகுறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவர் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த சரவண ரவி என்பவரது மனைவி தவமணி (36) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். பட்டப்பகலில், ஆள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் பெண் ஒருவர் வியாபாரியின் முகத்தில் பூச்சி மருந்து அடித்து செயினை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சமந்தா செய்த காரியம்; சுதா கொங்கரா மனதில் ஏற்பட்ட சோகம்! அடப்பாவமே

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…

3 minutes ago

பிரபலத்தின் மகனுடன் திருமணம்… சில்க் ஸ்மிதா குறித்து நடன இயக்குநர் ஓபன்!

சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…

8 minutes ago

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

2 days ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

2 days ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

2 days ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

2 days ago

This website uses cookies.