பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்: பள்ளியில் திடீரென உயிரிழந்த சிறுவன்: பெற்றோர்கள் பகீர் புகார்…!!

திருச்சியில் அமைந்துள்ள செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவன் பள்ளி உணவு இடைவேளையின் போது வலிப்பு வந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருச்சியில் அமைந்துள்ள செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி உணவு இடைவேளையின் போது உணவருந்தி விட்டு வகுப்பறையில் வந்து அமர்ந்தான்.நன்றாக பேசிக் கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு அப்படியே சாய்ந்து தரையில் விழுந்துள்ளார்.

உடன் படிக்கும் குழந்தைகள் அதை கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தனர்.உணவு இடைவேளை முடிந்து அடுத்த வகுப்புக்கு ஆசிரியர் வரும்போது மாணவர் கீழே கிடப்பதை கண்டு உடனே மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சிறுவனின் பெற்றோர் எங்களுடைய மகனுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சனை இருக்கிறது.அதற்காக அவர் மருந்துகள் எடுத்துக் கொண்டார், ஏற்கனவே வலிப்பு ஏற்பட்டுள்ளது. இது பள்ளி நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது வலிப்பு ஏற்பட்டு சரியான நேரத்தில் கவனிக்காததால் எங்கள் மகனை இழந்து விட்டோம். பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் ஏற்பட்ட பிரச்சனை இது என கண்ணீர் மல்க தெரிவித்தனர். வகுப்பறையில் மாணவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Sudha

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

4 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

5 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

6 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

6 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

6 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

7 hours ago

This website uses cookies.