பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்: பள்ளியில் திடீரென உயிரிழந்த சிறுவன்: பெற்றோர்கள் பகீர் புகார்…!!

திருச்சியில் அமைந்துள்ள செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவன் பள்ளி உணவு இடைவேளையின் போது வலிப்பு வந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருச்சியில் அமைந்துள்ள செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி உணவு இடைவேளையின் போது உணவருந்தி விட்டு வகுப்பறையில் வந்து அமர்ந்தான்.நன்றாக பேசிக் கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு அப்படியே சாய்ந்து தரையில் விழுந்துள்ளார்.

உடன் படிக்கும் குழந்தைகள் அதை கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தனர்.உணவு இடைவேளை முடிந்து அடுத்த வகுப்புக்கு ஆசிரியர் வரும்போது மாணவர் கீழே கிடப்பதை கண்டு உடனே மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சிறுவனின் பெற்றோர் எங்களுடைய மகனுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சனை இருக்கிறது.அதற்காக அவர் மருந்துகள் எடுத்துக் கொண்டார், ஏற்கனவே வலிப்பு ஏற்பட்டுள்ளது. இது பள்ளி நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது வலிப்பு ஏற்பட்டு சரியான நேரத்தில் கவனிக்காததால் எங்கள் மகனை இழந்து விட்டோம். பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் ஏற்பட்ட பிரச்சனை இது என கண்ணீர் மல்க தெரிவித்தனர். வகுப்பறையில் மாணவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Sudha

Recent Posts

ஐபிஎல் வரலாற்றில் அசாத்திய சாதனை.. 14 வயது வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்த அரசு!!

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…

6 minutes ago

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

2 hours ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

2 hours ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

2 hours ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

2 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

3 hours ago

This website uses cookies.