குஜராத்தை சேர்ந்த ஒரு மாணவி கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட +2 தேர்வுகளை எழுதி இருந்தார்.தேர்வில் அந்த மாணவி இயற்பியல் மற்றும் வேதியியல் என இரு பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து அவர் ஜூன் மாதம் நடந்த துணைத் தேர்வுகளை எழுதியிருக்கிறார். ஆனால், அந்த தேர்விலும் அவரால் இயற்பியல் பாடத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை. கடந்த மார்ச் மாதம் நடந்த பொது தேர்வில் அவர் இயற்பியல் பாடத்தில் 21 மார்க் மட்டுமே பெற்றார். அதேபோல ஜூன் மாதம் நடந்த மறு தேர்விலும் அவரால் வெறும் 22 மதிப்பெண் மட்டுமே பெற முடிந்துள்ளது.
ஆனால் அந்த மாணவி நீட் தேர்வில்720க்கு 705 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அவர் இயற்பியலில் 99.89% மதிப்பெண்களும் வேதியியலில் 99.14%, உயிரியலில் 99.14% மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஒட்டுமொத்தமாக 99.94% மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதன் மூலம் அவரால் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியிலேயே சேர முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இரண்டு முறை முயன்றும் அவரால் +2 தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் அந்த மானவியால் கல்லூரியில் சேர முடியாத நிலை உருவாகி உள்ளது.
துணைத் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்களால் அவரது நீட் மார்க் குறித்தும் பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக அங்குள்ள கல்வியாளர் ஒருவர் கூறுகையில், “நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தால் வழக்கு நடக்கும் இந்த சூழலில் இந்த வழக்கைப் புறக்கணிக்க முடியாது. +2 தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாத மாணவி நீட் தேர்வில் இவ்வளவு அதிக மார்க் பெறுவது சாத்தியமற்றது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.
நீட் தேர்வில் 705 மார்க் பெற்ற மாணவி, +2 தேர்வில் தோல்வி அடைந்துள்ள நிகழ்வு நாடு முழுக்க பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.