முட்டாள், மூடத்தனமான மனிதர்.. ஆளுநரை வசை பாடிய ஆ.ராசாவால் திமுகவுக்கு புதிய சிக்கல்!!

சமீபத்தில் வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வள்ளலாரை சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என புகழ்ந்தது இருந்தார். இதற்கு திமுக மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வள்ளலார் வைதீக மதநெறிகளை சாதி, சமய வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்து தனி சமய வழி உருவாக்கியவர். வைதீகத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என ஆளுநர் ரவி பேசியிருப்பது பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் இந்த ஒரு சனாதன தர்ம பேச்சுக்கு பெரும் எதிர்ப்பையும் தெரிவித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சரின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் ஆளுநர் தெரிவித்த கருத்துகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டோர் கடுமையாக கண்டித்தனர். “ஆளுநர் திட்டமிட்டே தமிழ்நாடு மக்கள் உணர்வுகளுக்கு நாளும் சவால் விடுவது போல் அபத்தக் கருத்துகளை வெளியிடுகிறார்” என்று அவர் தெரிவித்தார். இது ஒரு பக்கம் இருக்க, மறு பக்கம் கையெழுத்து இயக்கம் தொடங்கப் பட்டிருக்கிறது.

தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் ஜூன் 20 ந் தேதியில் இருந்து அடுத்தமாதம் 20- ந்தேதி வரை பொது மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடை பெறுகிறது என்று கூறப் பட்டிருக்கிறது. இதையொட்டி ஜூன் 20 ந் தேதி காலை எழும்பூர் ம.தி.மு.க தலைமைக் கழகமான தாயகத்தில் பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முதல் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில் தற்பொழுது திமுக எம்.பி ஆ.ராசா சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு இருக்கிறார். பெரம்பலூரில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கூட்டத்தில் பங்கேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ‘அரசியல் சட்ட பாதுகாப்போடு ஒரு முட்டாள், ஒரு மூடத்தனமான மனிதர் இங்கே வந்து கவர்னராக இருக்கிறார்?’ என ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்தார்.

அரசியலமைப்பு சாசனத்தின் படி ஆளுநர் பதவியில் இருக்கும் ஒருவரை முட்டாள் என்று கூறுவது சட்டத்திற்கு புறம்பானது. அரசியல் அமைப்பு சாசனத்தின் படி இது கடுமையாக நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒரு விஷயமாக கருதப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எனவே ஆளுநர் தரப்பில் திமுக மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு விஷயங்களையும் கையாண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அறிவாலயம் வட்டாரங்கள் பதட்டத்தில் உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

10 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

11 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

12 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

12 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

12 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

14 hours ago

This website uses cookies.