திமுக எம்பி கதிர் ஆனந்த்துக்கு அடுத்தடுத்து சம்மன் : அமலாக்கத்துறை நோட்டீஸ்…அதிர்ச்சியில் அறிவாலயம்!!!
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியிலிருந்து கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் நடத்தினர். இதில் ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து வெவ்வேறு இடங்களில் நடந்த ரெய்டில் மொத்தம் ரூ.10.57 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
எனவே தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது. இதில் கதிர் ஆனந்த் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று கதிர் ஆனந்த் ஆஜராகினார்.
இவருடன் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் என இவரது ஆதரவாளர்களும் ஆஜராகினர். இவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 125(ஏ), இந்திய தண்டனைச் சட்டம் 171(இ), 171 பி(2) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. ஆனால் சம்மன் இதுவரை கிடைக்கவில்லை என்று கதிர் ஆனந்த் தரப்பில் சொல்லப்படுகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.