அமெரிக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து : இந்திய இளைஞர் உயிரிழந்ததால் பரபரப்பு!!
அமெரிக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்திய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 17 பேர் வரை காயமடைந்த நிலையில் உயிரிழந்த நபரின் பெயர் பாசில் கான் (27) என தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹார்லெம் பகுதியில் செயின்ட் நிகோலஸ் பிளேஸ் என்ற குடியிருப்பு ஒன்று உள்ளது.
இதில், திடீரென லித்தியம் பேட்டரி ஒன்று வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து கட்டிடம் முழுவதும் தீப்பற்றி பரவியது. இதனால், அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் கீழே குதித்து தப்பியோடினர்.
இதில், 17 பேர் வரை காயமடைந்த நிலையில் இந்திய இளைஞரான பாசில் கான் என்பவர் உயிரிழந்தார். இதனை நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. தொடர்ந்து அவரின் குடும்பத்தினருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இந்த தீவிபத்து குறித்து காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் நகர அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியூயார்க் நகர தீயணைப்புத் துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 2023-இல் மட்டும் லித்தியம்-அயன் பேட்டரிகள் காரணமாக நகரத்தில் 267 தீ விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக 150 பேர் காயமடைந்ததாகவும், 18 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.