மதுரை: சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து, விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரை வந்தடைந்தார். அவரை, மதுரை மாவட்ட அதிமுக சார்பில் ,முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்த விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர், விமான நிலைய பேருந்தில் வந்தபோது, செல்போனில் வீடியோ எடுத்து, துரோகியுடன் பயணம் செய்வதாகவும், சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர் என்றும், 10.5 இடஒதுக்கிடு வழங்கி தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் எனக் கூறி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக, விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார், அந்த நபரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். முதல்கட்ட விசாரணையில், சிங்கபூரிலிருந்து சென்னை வழியாக மதுரை வந்த சிங்கம்புணரி எம்.வையாபுரிபட்டி கிராமத்தை சேர்ந்த யோகேஸ்வரன் மகன் ராஜேஸ்வரன் (42) என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர், மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் ராஜேஸ்வரன் செல்போனை பறித்து, விசாரணைக்காக போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதனால், மதுரை விமான நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியவரை, மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் அழைத்து வந்த போது, அங்கிருந்தவர்கள் அந்த நபரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை அண்மையில் பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமார் பகிர்ந்துள்ளார்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.