சென்னை ; அரசியல் முதிர்ச்சி மற்றும் அனுபவமற்றவரை தமிழகத்தில் பாஜக தலைமையில் அமர்த்தியது தான் தவறு என்று நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்திய பின் நடிகர் எஸ்வி சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மாநில பாஜகவுடன் இருந்த கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிவிட்டது. இதனால் மோடிக்கு எந்த பாதிப்பும் இல்லை. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இந்தியாவின் ஹாட்ரிக் பிரதமராக வருவது உறுதி. ஏனென்றால் இந்த கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு அவருக்கு பெரிய அளவில் உதவி செய்ய போவது இல்லை.
அரசியல் முதிர்ச்சி மற்றும் அனுபவமற்றவரை தமிழகத்தில் பாஜக தலைமையில் அமர்த்தியது தான் தவறு. மத்திய பிரதேச தேர்தல்களில் அண்ணாமலை பார்வையாளராக மாற்றப்படுவார். விரைவில் அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்படுவார். தமிழகத்தில் அண்ணாமலை பாஜக தலைவராக இருக்கும் போது, பாஜக ஜெயிக்கும் சீட்டுகள் பூஜ்யமாக தான் இருக்கும்.
அனைத்து ரசிகர் மன்றங்களைக் அழைத்து ஒரு கட்சிக்கு தேவையான அமைப்புகளை நடிகர் விஜய் கொண்டு வருகிறார். அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று சொல்ல முடியாது. லியோ இசை வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டதா அல்லது நிறுத்தினார்களா என்ற இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது, நிறுவனமே அவர்களே நிறுத்தியதாக தான் தெரிவித்து உள்ளனர், என்றார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.