சென்னை ; அரசியல் முதிர்ச்சி மற்றும் அனுபவமற்றவரை தமிழகத்தில் பாஜக தலைமையில் அமர்த்தியது தான் தவறு என்று நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்திய பின் நடிகர் எஸ்வி சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மாநில பாஜகவுடன் இருந்த கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிவிட்டது. இதனால் மோடிக்கு எந்த பாதிப்பும் இல்லை. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இந்தியாவின் ஹாட்ரிக் பிரதமராக வருவது உறுதி. ஏனென்றால் இந்த கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு அவருக்கு பெரிய அளவில் உதவி செய்ய போவது இல்லை.
அரசியல் முதிர்ச்சி மற்றும் அனுபவமற்றவரை தமிழகத்தில் பாஜக தலைமையில் அமர்த்தியது தான் தவறு. மத்திய பிரதேச தேர்தல்களில் அண்ணாமலை பார்வையாளராக மாற்றப்படுவார். விரைவில் அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்படுவார். தமிழகத்தில் அண்ணாமலை பாஜக தலைவராக இருக்கும் போது, பாஜக ஜெயிக்கும் சீட்டுகள் பூஜ்யமாக தான் இருக்கும்.
அனைத்து ரசிகர் மன்றங்களைக் அழைத்து ஒரு கட்சிக்கு தேவையான அமைப்புகளை நடிகர் விஜய் கொண்டு வருகிறார். அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று சொல்ல முடியாது. லியோ இசை வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டதா அல்லது நிறுத்தினார்களா என்ற இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது, நிறுவனமே அவர்களே நிறுத்தியதாக தான் தெரிவித்து உள்ளனர், என்றார்.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.