முதல்வரின் நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு; அரசியல் மட்டுமே காரணம்;தமாகா தலைவர் ஜி கே வாசன்

கோவை சிட்ரா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

நிதி ஆயோக் கூட்டத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான வாக்காளர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு குறைகளை நிறைவாக்குவார் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முதல்வருக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் துரதிஷ்டவிதமாக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறிவிட்டார் தமிழக முதல்வர்

மேலும் முதல்வர் பேசும்போது மதுரை எய்ம்ஸ் பற்றி பேசுகிறார், மெட்ரோ ரயில் திட்டம் பற்றி பேசுகிறார். இவற்றுக்கு வரும் நாட்களில் மத்திய அரசு நிதி ஒதுக்கும் என நம்புகிறோம். அது அவர்களது கடமை.

முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் அமர்ந்து நேரடியாக கேள்விகளை கேட்டிருக்க வேண்டும். அதைத்தான் மக்களும் எதிர்பார்க்கின்றனர். நிதி ஆயோக் கூட்டத்தை தவிர்த்ததற்கு காரணம் அரசியல் வாக்கு வங்கி தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.நிதி ஆயோக் கூட்டம் என்பது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடக்கக்கூடிய ஒன்று. அதில் தமிழகத்தின் அழுத்தமான ஆலோசனைகளை, தேவைகளை எடுத்து கூறக்கூடிய ஒரே பிரதிநிதி முதல்வராகத்தான் இருக்க முடியும். அதை அவர் செய்ய தவறிருக்கிறார்.

நிதி ஆயோக் கூட்டத்தை தவிர்த்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழக மக்களுக்கு உங்களது கடமையை நீங்கள் செய்யவில்லை என குற்றம் சாட்டுகிறோம். எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு பாகுபாடு இன்றி நிதி ஒதுக்கி கொண்டிருக்கிறது. அதை தாண்டி எந்தெந்த திட்டங்களுக்கு அதிகம் தேவையோ அந்தத் திட்டங்களுக்கு படிப்படியாக எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்கிக் கொண்டிருக்கிறது.ஒரு பட்ஜெட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் குறிப்பிட்டு அனைத்து மாநிலத்திற்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றால், அது பாஜகவிற்கு மட்டுமல்ல காங்கிரஸ்க்கும் சாத்தியமில்லை.

முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதது தப்பு எனும் மக்களின் கருத்தை மறக்கக்கூடிய வகையில் இன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்’ என்றார்.நல்லரசாக செயல்படும் மத்திய அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றக்கூடிய நல்ல சூழலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு பெரும்பாலான மக்கள் இந்தியாவில் வாக்களித்துள்ளனர். எனவே பலமான தமிழகமும், வலிமையான பாரதமும் ஏற்பட பிரதமர் தலைமைக்கு தமிழக கட்சிகள் துணை நின்று வளமான தமிழகத்தை உருவாக்க 2026 இல் வழி வகுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள் என்று பேசினார்.

Sudha

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

1 hour ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

2 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

3 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

3 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

3 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

4 hours ago

This website uses cookies.