உக்ரைன் மீதான ரஷ்ய போரால் பதற்றம்: ரஷ்யாவில் இருந்தும் நாடு திரும்பும் தமிழக மாணவர்கள்…பாசத்துடன் வரவேற்ற பெற்றோர்..!!

கோவை: உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்தியா திரும்ப வரும் நிலையில் ரஷ்யாவில் இருந்தும் மாணவர்கள் கோவை வந்துள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெறும் போர் காரணமாக, உக்ரைன் நாட்டிற்கு படிக்கச் சென்ற மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். பல்வேறு கட்டங்களாக மாணவர்கள் இந்தியா திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே ரஷ்ய நாட்டிற்குள் போர் நடக்காத போதிலும் கூட ரஷ்ய நாட்டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர்கள் இன்று விமானம் மூலமாக கோவை திரும்பினர்.

அவ்வாறு கோவையைச் சேர்ந்த புவனேஷ் கார்த்திக் மற்றும் டீனா ஜெனிபர் என்ற இருவர் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு பெற்றோர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாங்கள் ரஷ்யாவில் உள்ள கிரீமியா மாகாணத்தில் உள்ள கிரிமியன் ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் மருத்துவம் படிக்க சென்றோம்.

நாங்கள் இருக்கும் பகுதி ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லைப் பகுதி என்பதால் எங்களது பெற்றோர்கள் பதற்றம் அடைந்தனர். எங்கள் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே எங்களது பல்கலைக்கழகம் விருப்பப்பட்டால் வீட்டிற்குச் செல்லலாம் என்று அறிவித்தது. மேலும் எங்களது பெற்றோரும் நாடு திரும்ப நிர்ப்பந்தித்ததால் 70 சதவீதம் மாணவர்கள் தற்போது நாடு திரும்பியுள்ளனர்.

நாங்கள் இருக்கும் பகுதியில் விமானம் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கிரிமியா மாகாணத்திலிருந்து மாஸ்கோ வரை ரயிலில் பயணித்து, பின்னர் அங்கிருந்து துபாய் வழியாக கோவை வந்துள்ளோம். எங்களது மருத்துவப் படிப்பு மொத்தத்திற்கும் ரஷ்யாவில் ரூ. 35 லட்சம் வரை செலவாகும்.

ஆனால் இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை செலவாகிறது. இதனால் தான் அங்கு படிக்கச் சென்றோம். தற்போது ஆன்லைன் மூலமாக எங்களுக்கு வகுப்புகள் நடைபெற உள்ளது. இவ்வாறு மாணவர்கள் கூறினர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

47 minutes ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

2 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

3 hours ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

4 hours ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

5 hours ago

This website uses cookies.