பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை கூடுகிறது.
ஆண்டுதோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநரின் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்என் ரவியின் உரையுடன் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. இதற்காக சபாநாயகர் அப்பாவு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்என் ரவியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
காலை 9.57 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்திற்கு வரும் ஆளுநரை, சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். பின்னர், சிவப்பு கம்பள வரவேற்புடன், போலீசார் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, ஆளுநர் உரை நிகழ்த்துவார். பின்னர், சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். அதில், அவையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். அடுத்த வாரம் 19ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முக்கிய அறிவிப்புகள் ஆளுநரின் உரையில் இடம்பெறுமா..? என்பது குறித்து தெரிய வில்லை.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போதுள்ள அரசியல் சூழலில் இந்தக் கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.