பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை கூடுகிறது.
ஆண்டுதோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநரின் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்என் ரவியின் உரையுடன் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. இதற்காக சபாநாயகர் அப்பாவு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்என் ரவியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
காலை 9.57 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்திற்கு வரும் ஆளுநரை, சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். பின்னர், சிவப்பு கம்பள வரவேற்புடன், போலீசார் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, ஆளுநர் உரை நிகழ்த்துவார். பின்னர், சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். அதில், அவையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். அடுத்த வாரம் 19ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முக்கிய அறிவிப்புகள் ஆளுநரின் உரையில் இடம்பெறுமா..? என்பது குறித்து தெரிய வில்லை.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போதுள்ள அரசியல் சூழலில் இந்தக் கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.