சென்னை : தமிழகத்தை பாஜக ஒருபோதும் ஆளவே முடியாது என்று கூறிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தமிழகத்தை வைத்து பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது :-நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. அது உங்களின் காதுகளுக்கு எட்டவில்லை. அவர்களின் கோரிக்கையை மறுத்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள்.
இந்தியா என்பது கூட்டாட்சி. தமிழகத்தில் உள்ள என் சகோதரரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என நான் கேட்பேன். அவர் தேவையை என்னிடம் சொல்வதுபோல எனக்கு தேவையானதை நானும் கேட்டுப் பெறுவேன். இதுதான் கூட்டாட்சி. இது ராஜ்ஜியம் அல்ல. உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது, என ஆக்ரோஷமாக பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்கட்சிகள் கைதட்டி வரவேற்பு கொடுத்தன.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பாணியில் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- வழக்கம் போல உங்ளின் பேச்சை கேட்டு சிரித்து மகிந்தோம் ராகுல் ஜி. தமிழகத்தை பாஜக ஆளவே முடியாது என் நீங்கள் கூறுனீர்கள். இந்த விவகாரத்தில் நான் தமிழகத்தின் மைந்தன் என்ற வகையில் உங்களை வழிநடத்த விரும்புகிறேன் ராகுல் ஜி.
தமிழகத்தில் நீங்கள் திமுக என்னும் ஆக்சிஜன் உதவியுடன் இருக்கிறீர்கள். புதுச்சேரியில் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். இது ஒரு மைல்கல். அதன் அடுத் ஜங்ஷன் தமிழகம்தான். வரலாற்றை எப்போதும் மறக்காதீர்கள் சார். அமேதியில் நடந்தது போன்றதொரு வரலாறு மீண்டும் நிகழ்த்தப்படும். அடுத்த நீங்கள் போலியாக ஒரு சர்ச்சையை உருவாக்கும் வரை விடைபெறுகிறேன், என்று பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலையின் இந்த பதிலடிக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக காங்கிரஸ், திமுகவினரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.