சென்னை : தமிழகத்தை பாஜக ஒருபோதும் ஆளவே முடியாது என்று கூறிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தமிழகத்தை வைத்து பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது :-நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. அது உங்களின் காதுகளுக்கு எட்டவில்லை. அவர்களின் கோரிக்கையை மறுத்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள்.
இந்தியா என்பது கூட்டாட்சி. தமிழகத்தில் உள்ள என் சகோதரரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என நான் கேட்பேன். அவர் தேவையை என்னிடம் சொல்வதுபோல எனக்கு தேவையானதை நானும் கேட்டுப் பெறுவேன். இதுதான் கூட்டாட்சி. இது ராஜ்ஜியம் அல்ல. உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது, என ஆக்ரோஷமாக பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்கட்சிகள் கைதட்டி வரவேற்பு கொடுத்தன.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பாணியில் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- வழக்கம் போல உங்ளின் பேச்சை கேட்டு சிரித்து மகிந்தோம் ராகுல் ஜி. தமிழகத்தை பாஜக ஆளவே முடியாது என் நீங்கள் கூறுனீர்கள். இந்த விவகாரத்தில் நான் தமிழகத்தின் மைந்தன் என்ற வகையில் உங்களை வழிநடத்த விரும்புகிறேன் ராகுல் ஜி.
தமிழகத்தில் நீங்கள் திமுக என்னும் ஆக்சிஜன் உதவியுடன் இருக்கிறீர்கள். புதுச்சேரியில் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். இது ஒரு மைல்கல். அதன் அடுத் ஜங்ஷன் தமிழகம்தான். வரலாற்றை எப்போதும் மறக்காதீர்கள் சார். அமேதியில் நடந்தது போன்றதொரு வரலாறு மீண்டும் நிகழ்த்தப்படும். அடுத்த நீங்கள் போலியாக ஒரு சர்ச்சையை உருவாக்கும் வரை விடைபெறுகிறேன், என்று பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலையின் இந்த பதிலடிக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக காங்கிரஸ், திமுகவினரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரகசிய தகவல் அடிப்படையில் போதை தடுப்பு போலீசார்…
தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி…
விஜய்க்கு ஃபத்வா… விஜய் கடந்த மாதம் சென்னை ஒய் எம் சி ஏ பள்ளிவாசலில் பல இஸ்லாமியர்களுடன் ரமலான் நோன்பில்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
This website uses cookies.