அரசியல் கூட்டங்களுக்கு தொடரும் தடை… எல்கேஜி, யூகேஜி பள்ளிகளை திறக்க அனுமதி : தமிழகத்தில் மார்ச் 2 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றுக் கட்டுப்பாடுகள் மார்ச் 2ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில்‌, கொரோனா நோய்த்தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ அரசாணை எண்‌.53 வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை, நாள்‌ 28-01-2022-ன்படி, தளர்வுகளுடன்‌ கூடிய ஊரடங்கு நடைமுறையில்‌ இருந்து வருகிறது.

மத்திய அரசின்‌ உள்துறை அமைச்சகத்தின்‌ அறிவிக்கைப்படி கொரோனா நோய்த்‌ தொற்றை கட்டுப்படுத்தத்‌ தேவையான கட்டுப்பாடுகள்‌ விதிக்கவும்‌ மற்றும்‌ அவசியம்‌ ஏற்படின்‌ குற்றவியல்‌ நடைமுறைச்‌ சட்டம்‌, 1973, பிரிவு 144-ன்‌ கீழ்‌ நடவடிக்கை மேற்கொள்ளவும்‌ மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்‌, கொரோனா நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ மற்றும்‌ கட்டுப்பாடுகள்‌ குறித்து ஆய்வு செய்ய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ இன்று (12-2-2022) ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. ஆதில்‌, தமிழ்நாடு அரசின்‌ தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ. இறையன்பு இ.ஆ.ப. மற்றும்‌ உயர்‌ அதிகாரிகள்‌ கலந்து கொண்டனர்‌.

தமிழ்நாட்டில்‌, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களது வழிகாட்டுதலின்‌ பேரில்‌ மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்‌
காரணமாக 22-1-2022 அன்று 30,744 ஆக இருந்த நோய்த்‌ தொற்று பாதிக்கப்பட்டவர்களின்‌ எண்ணிக்கை
11-2-2022 அன்று 3086 ஆக குறைந்துள்ளது. நோய்த்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க
போதுமான மருத்துவ கட்டமைப்புகள்‌ தயார்‌ நிலையில்‌ உள்ளது.

மருத்துவமனைகளில்‌ சிகிச்சைக்காக அணுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின்‌ எண்ணிக்கை குறைவாக உள்ளதைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌. மாநிலத்தின்‌ வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ – மாணவியர்களின்‌ எதிர்காலம்‌ மற்றும்‌ மக்களின்‌ இயல்பு வாழ்க்கை மீள திரும்புவதற்கு ஏதுவாகவும்‌, தமிழ்நாடு அரசால்‌ பல்வேறு தளர்வுகள்‌ அறிவிக்கப்பட்டு நடைமுறையில்‌ உள்ளன.

மக்களின்‌ வாழ்வாதாரம்‌ கருதி அரசால்‌ பல்வேறு தளர்வுகள்‌ வழங்கப்பட்டுள்ள நிலையில்‌, மக்கள்‌ பொது இடங்களில்‌ கட்டாயம்‌ முகக்‌ கவசம்‌ அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும்‌ இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக்‌ கொள்ளுமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

மேலும்‌, அனைத்து கடைகளின்‌ நுழைவு வாயிலில்‌, வாடிக்கையாளர்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌ கை சுத்திகரிப்பான்கள்‌ கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல்‌ வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்‌ கடைகளில்‌ பணிபுரிபவர்கள்‌ மற்றும்‌ வாடிக்கையாளர்கள்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம்‌ உறுதி செய்ய வேண்டும்‌ என கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

தமிழ்நாட்டில்‌ தொடர்ந்து தொற்றுப்‌ பரவலை கட்டுக்குள்‌ வைத்திடவும்‌, குறைத்திடவும்‌ பின்வரும்‌ கட்டுப்பாடுகள்‌ மட்டும்‌ 16-2-2022 முதல்‌ 2-3-2022 வரர நடைமுறைப்படுத்தப்படும்‌.

  1. சமுதாய, கலாச்சார மற்றும்‌ அரசியல்‌ கூட்டங்கள்‌ போன்ற பொது மக்கள்‌ கூடும்‌ நிகழ்வுகளுக்கும்‌ உள்ள
    தடை தொடரும்‌.
  2. திருமணம்‌ மற்றும்‌ திருமணம்‌ சார்ந்த நிகழ்வுகள்‌ அதிகபட்சம்‌ 200 நபர்களுடன்‌ மட்டும்‌ நடத்த
    அனுமதிக்கப்படும்‌.
  3. இறப்பு சார்ந்த நிகழ்வுகள்‌ 100 நபர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்படும்‌.

மேற்கண்ட கட்டுப்பாடுகள்‌ தவிர்த்து கொரோணா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள்‌ விலக்கிக்‌ கொள்ளப்படுகின்றன.

• நர்சரி பள்ளிகள்‌ மற்றும்‌ மழைலையர்‌ விளையாட்டுப்‌ பள்ளிகள்‌ திறக்க அனுமதியளிக்கப்படுகிறது.

• பொருட்காட்சிகள்‌ நடத்த அணுமதியளிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றிலிருந்து மக்களைக்‌ காத்திட அரசு மேற்கொள்ளும்‌ அனைத்து நடவடிக்கைகளுக்கும்‌ முழு
ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்கள்‌ அனைவரையும்‌ கனிவுடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

ஆசையை காட்டி மோசம் செய்த லைகா நிறுவனம்.. விஜய் மகனுக்கு கல்தா!

லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…

1 minute ago

’தமிழக மக்களை முட்டாளாக வளர்க்க வேண்டும் என..’ பாஜக ராம சீனிவாசன் பரபரப்பு பேச்சு!

பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…

34 minutes ago

பாஜக டூ தனிக்கட்சி.. பிரபல நடிகை திடீர் விலகல்.. காரணம் இதுவா?

பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…

1 hour ago

ரூம் போட்டு சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டம்? தபெதிகவினர் மீது போலீசார் ஆக்‌ஷன்!

சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…

2 hours ago

2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!

2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…

2 hours ago

This website uses cookies.