மயிலாடுதுறையில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு கருப்புக்கொடி காட்டப்பட்ட நிலையில், இன்று அவர் திடீரென டெல்லி செல்வது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, 7 பேரின் விடுதலை குறித்த தனித்தீர்மான மசோதாக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் ஆர்என் ரவி கிடப்பில் போட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலமுறை அவரை சந்தித்து பேசியும் பலனளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, ஆளும் திமுகவினர் ஆளுநர் பற்றி நேரடியாக விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, நேற்று மயிலாடுதுறைக்கு ஆன்மீகப் பயணம் கொண்ட ஆளுநருக்கு, விசிக, திராவிட இயக்கத்தினர் கருப்புக் கொடியை காட்டியதுடன், அவரது வாகனத்தின் மீதும் அதனை எறிய முற்பட்டனர். இதற்க பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தைக் கூட தமிழக அரசு புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவி திடீரென இன்று டெல்லி செல்ல இருக்கிறார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்என் ரவி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், அப்போது தமிழக நிலவரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளையில், நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க முடிவு செய்ததாக அண்மையில் தகவல் வெளியாகி வந்தன. எனவே, இது தொடர்பாக இந்தப் பயணம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர கோரி தமிழக அரசின் சார்பில் தொடர் வலியுறுத்தல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஆளுநரின் இந்த டெல்லி பயணம் முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.