செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இ-கேஒய்சி செய்யாத பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கேஒய்சி சரிபார்ப்பும் அவசியம் எனவும் பொது விநியோகத் திட்ட விற்பனையாளர்களுக்கும் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இ-கேஒய்சி அவசியம் செய்ய வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் வாங்கும் பயனாளிகள் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விதிமுறை கட்டாயமாக்கப்படவில்லை. எனினும், ரேஷன் கார்டு பயனாளிகள் அனைவரும் இந்த அப்டேட்டை முடிக்க வேண்டியது அவசியம். எனவே ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் கேஒய்சி சரிபார்ப்பை செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் உதவிகளைத் தொடர்ந்து பெறமுடியாது.அவர்களுடைய ரேஷன் கார்டும் ரத்து செய்யப்படும்.
இப்படி இ-கேஒய்சி செய்வதன் மூலம் நடைபெறும் மோசடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கேஒய்சியை கட்டாயமாக செய்து கொள்ளுமாறு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எந்த காரணத்திற்காகவும் மாநிலத்திற்கு வெளியே உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் (யூனியன் பிரதேசம், குஜராத், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, ஒடிசா, புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் தவிர ) அவர்களின் கேஒய்சி ஆதார் சரிபார்ப்பை அந்த மாநிலத்தில் உள்ள அவர்களுக்கு அருகிலுள்ள பொது விநியோக முறை விற்பனையாளரிடம் சென்று செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.