வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னையில் ஒருநாள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழக வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளா, கோவா, மகாராஷ்டிர உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை கடந்த 23ம் தேதி தாமதமாக விலகியது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் நல்ல பலனை கொடுக்கும் வடகிழக்கு பருவமழையும் தாமதமாக இன்று தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்ததால் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் ஒரு சுணக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னையில் ஒருநாள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதள பக்கத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- மத்திய கடலோர பகுதி, தென் கடலோர பகுதி, தென் தமிழகம் ஆகியவற்றில் இன்று மழை தொடங்கும். அது போல் வட கடலோர தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 1 வாரம் வரை நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.
6 நாட்களில் ஒரு நாள் சென்னையில் வரும் 31 ஆம் தேதி அல்லது நவம்பர் 1 ஆம் தேதி தரமான சம்பவம் நடைபெறும். மேலடுக்கு சுழற்சியால் வரும் நவம்பர் 5ஆம் தேதி வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 6 நாட்களில் குறைந்தபட்சம் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு ஒரு நாளாவது சிறந்த நாளாக அமையும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போல் இந்த ஆண்டும் மழை பெய்யும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.