சென்னையில் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் மின்விளக்குகளை அணைத்து விட்டு, செல்போன் டார்ச்சுகளை ஒளிரச் செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பணி நியமனம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தி கடந்த மாதம் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு ஆசிரியர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, ஆசிரியர் சங்கங்கள், பள்ளிக்கல்வித்துறை இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடுத்த உறுதியின் பேரில், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை அடுத்தடுத்து திரும்பப் பெற்றனர். தொடர்ந்து, அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆசிரியர் சங்கங்கள் கூறி வேதனை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை உடனே பணி வழங்கக் கோரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் கைது செய்து புதுப்பேட்டை பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர். இதனை அடுத்து மாலை அவர்களை விடுவிப்பதாக போலீசார் அறிவித்த நிலையில், தொடர்ந்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.