கிரேன் கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கர்னூல் மாவட்டத்தில் ரெகுமானா கடா பகுதியில் பாலமுரு – ரங்காரெட்டி இடையே பாசன திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. சுமார் 100 அடி ஆழமுள்ள சுரங்கப்பாதையில் கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக இராட்சச கிரேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வழக்கம் போல, நேற்றிரவு கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென கிரேன் கம்பி அறுந்து விழுந்தது. இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கொல்லப்பூர் போலீஸ், விபத்து குறித்து ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் 100 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டு, உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.