இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக்கொண்டு உள்ளோம் ஆனால் அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என அண்மையில் சீமான் பேசியிருந்தார்.
இதற்கு நடிகர் ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அநீதிக்கு எதிராக என்றைக்காவது போராடி உள்ளார்களா? நான் இஸ்லாமியர்களை அவமதித்ததாக கூறி மன்னிப்பு கேட்டால் அவர்கள் எனக்கு ஓட்டு போடுவார்களா? நடிகர் ராஜ்கிரண் இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்? என்று கேள்வி எழுப்பினார்.
சீமானின் இந்த பேச்சு மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சீமானின் இந்த கருத்துக்கு மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.
“முல்லைபெரியாறு, காவிரி உரிமை, கூடங்குளம், மீத்தேன், NLC, விவசாயிகள், மீனவர்கள் நலன்கள் அனைத்திலும் முன்வரிசையில் நின்றவர்கள் முஸ்லிம்கள். அநீதிக்கு எதிராக போராடியதுண்டா? என கேட்கும் சகோ. சீமான் அவர்களே… கருத்தில் நிதானம் முக்கியம்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.