பாமக சார்பில் போட்டியிடவில்லை என வெளியான தகவலுக்கு இயக்குநர் தங்கர் பச்சான் X தளம் மூலம் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிடுகிறது. அந்தக் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் (தனி) தொகுதியை தவிர்த்து எஞ்சிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கை பாமக தலைமை அறிவித்தது.
அதில், இயக்குநர் தங்கர் பச்சான் கடலூரில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே, பாமக சார்பில் தங்கர் பச்சான் போட்டியிட மறுத்து விட்டதாக தகவல் வெளியாகின.
இந்த தகவல் வைரலான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர் தங்கர் பச்சான் X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது :- கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச் செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன், என தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் இருக்கும் படத்தையும் அவர் வெளியிட்டு, தான் பாமக சார்பில் கடலூரில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
ஓட்டப்பிடாரம் பகுதியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதையும் படியுங்க…
This website uses cookies.