தஞ்சை அருகே வேலை முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல பணி முடித்து விட்டு தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்த பக்கத்து ஊரான மேட்டுபட்டியை சேர்ந்த கொடிஅரசன் என்ற இளைஞர், பெண்ணை அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விடுவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய அவரும் கொடி அரசனுடன் வாகனத்தில் சென்றுள்ளார்.
ஆனால், அந்த இளம்பெண்ணை ஏமாற்றி, அருகே இருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கொடி அரசன் தனது நண்பர்களான தமிழரசன், சுகுமாரன், கண்ணன் உள்பட 5 பேருடன் இணைந்து கூட்டு பாலியல் செய்துள்ளனர்.
இதனால், பாதிக்கப்பட்ட பெண் தஞ்சை வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வல்லம் டிஎஸ்பி பிருந்தா விசாரணை செய்து, கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணும், வேலூரில் பெண் மருத்துவரும், அம்பத்தூர் 13 வயது சிறுமியையும் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவங்கள் இதற்கு உதாரணமாகும். எனவே, பலாத்கார குற்றங்களை தடுத்து நிறுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.