தஞ்சை : திமுகவில் போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், தஞ்சை மாநகராட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகன் 3 வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.
தஞ்சை மாநகராட்சி தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார். இவர் தஞ்சை வண்டிக்காரத் தெருவில் வசித்து வருகிறார். இவர் தஞ்சை மாநகர 44வது வார்டு கவுன்சிலராக இருந்தார். வார்டு சீரமைப்பில் 44-வது பிரிக்கப்பட்டு 32, 33, 34 ஆகிய வார்டுகளில் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் செல்வகுமார் 32-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். இவருடைய தந்தையும் முன்னாள் கவுன்சிலர் ஆவார். தனக்கு இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கருதி தேர்தலுக்கான வேலைகளை செய்து வந்தார். ஆனால் வெளியான தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
இதனால் அவர் தி.மு.க.விற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார். மேலும் தான் ஏற்கனவே போட்டியிட்ட 44-வது வார்டு தற்போது 3 வார்டுகளில் இடம்பெற்றிருப்பதால் 3 வார்டுகளிலும் போட்டியிட முடிவு செய்தார். அதன்படி 32 வது வார்டில் செல்வகுமார், 33 வது வார்டில் அவரது மனைவி வனிதாவும், 34 வது வார்டில் மகன் சக்கரவர்த்தியும் போட்டியிட முடிவு செய்து, 3 பேரும் ஒன்றாக தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதேபோன்று 34வது வார்டில் மேலும் 3 தி.மு.க.வினரும் வாய்ப்பு வழங்காததால் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர்.
திமுகவின் தஞ்சை சட்டமன்ற தேர்தலில் 2016ல் வேட்பாளராக போட்டியிட்ட அஞ்சுகம் பூபதி, தற்போது தஞ்சை மாநகராட்சியின் 51 வது வார்டில் போட்டியிடுகிறார். நிறைமாத கர்ப்பிணியான அஞ்சுகம் பூபதி தனது கணவருடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.