தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டானுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சையில் கிறிஸ்துவ விடுதியில் தங்கிப்படித்த மாணவி மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உயிரிழப்பிற்கு முன்னதாக, அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மகளின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை கவுரவப் பிரச்சனையாக தமிழக அரசு கருத வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது, ஒரு வழக்கை சிபிஐக்கு மாற்றும் அதிகாரத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ள தவறியுள்ளதாக தமிழக அரசு வாதம் செய்தது.
ஆனால், அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐதான் விசாரிக்கும் என திட்டவட்டமாக கூறியது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மதமாற்றத்தால் உயிரிழந்த லாவண்யாவின் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பாஜக எப்போதும் நியாயத்தின் பக்கம் உள்ளது. திமுக அரசு பொய்பிரசாரம் மேற்கொண்டதிற்கு மன்னிப்பு கேட்குமா? . இனிமேல் ஆவது உயிரிழந்த மாணவியின் பெற்றோரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பாரா..?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.