முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா. மதுரை நெல் பேட்டை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : கோவை அன்னபூர்னா விவகாரம் குறித்த கேள்விக்கு, பாஜக தேர்தலுக்கு முன்னதாக தமிழர்கள், தமிழ் என பேசுவர்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, இது போன்று தமிழர்களை அவமதிப்பர். எங்கள் பொது செயலாளர் எடப்பாடி இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. மத வாத சக்தியாக பாஜக இருப்பதால், பாஜக வுடன் கூட்டணி இல்லை. திமுக வை தவிர வேறு எந்த கட்சியிடனும் கூட்டணியில் சேரலாம்.
அதிமுக, திமுக என. தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் ஆட்சிக்கு வர முடியும். தமிழகத்தில் மது ஒழிப்பு மாநாடு மட்டும் அல்ல . அனைத்து போதை ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டியதுள்ளது. அந்த அளவுக்கு மது, போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் அதிமுக , திமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை நல் ஆட்சிக்கு அது சரிப்பட்டு வராது.
மேலும் படிக்க: தங்கும் விடுதியில் நடந்த உல்லாசம்.. உறவு முறை அண்ணன், தங்கையின் முறை தவறிய சகவாசத்தால் பிரிந்த உயிர்!
பல மாநிலங்கள் இதற்கு உதாரணமாக உள்ளது. முல்லை பெரியாறு அணையில், உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அளவு உயர்த்த வேண்டும். இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , மது ரையில் பேட்டி அளித்தார்.
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…
சினிமா படப்பிடிப்பில் நிறைய சம்பவங்கள் எதிர்பாரா வகையில் நடப்பதுண்டு. சில சம்பவங்கள் பெரிய பிரச்சனையாக வெடித்துவிடும், சில சம்பவங்கள் சத்தமே…
This website uses cookies.