தமிழகத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்… அனல் பறந்த அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நிறைவு..!!!

தமிழகத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்… அனல் பறந்த அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நிறைவு..!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரமும் நிறைவடைந்தது.

பிரச்சாரம் முடிவடைந்ததும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இதனால், பிரச்சார நேரம் நிறைவடைந்ததும் தொகுதி சாராத ஆட்கள் வெளியேற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அத்துடன் வெளிநபர்கள் தங்கவில்லை என்பதை விடுதி நிர்வாகிகள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அதற்கு முன்னதாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, சென்னையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அனல்பறக்க இறுதிகட்ட பரப்புரை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: ₹1000 உரிமைத் தொகை வேணுமா? பெண்களே தயாராக இருங்க : வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை..!

சென்னையில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஈடுபட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியின் உண்மை முகத்தை தெரிந்துகொண்டு அவரை மக்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டனர். இரவில் தனியாக பேய்ப்படம் பார்த்தவர்கள் கூட, இரவில் மோடி டிவியில் பேசப்போகிறார் என்றால் பயப்படுகின்றனர் என்று கூறி வாக்குகளை சேகரித்தார்.

சேலத்தில், அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை வாகனப் பேரணி நடத்தி தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, திமுக மற்றும் பாஜக பற்றி தனது விமர்சனங்களையும் தங்கள் கட்சி வாக்குறுதிகளை முன் வைத்து மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவை மாவட்டத்தில் இன்று இறுதி கட்ட தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “நான் அல்லது நீ இருக்க வேண்டும், இதைத் தவிர்த்து மற்றவர்கள் யாரும் அரசியல் களத்தினுள் நுழைந்து விடக்கூடாது என்பதில், இரு திராவிட கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன” என்றார்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக திமுகவின் திட்டங்களை எடுத்துக்கூறி சிங்காநல்லூர் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

6 minutes ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

1 hour ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

2 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

3 hours ago

AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…

3 hours ago

உச்சக்கட்ட சந்தோஷத்தில் அஜித்… திக்குமுக்காடிய ஆதிக் : GBU கொடுத்த சர்ப்ரைஸ்!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…

3 hours ago

This website uses cookies.