டிரெண்டிங்

வீட்டிற்கே சென்று நன்றி கூறிய விவசாயிகள்.. தமிழக அரசு பற்றி இபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை..!

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கடந்த 60 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 1650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்திற்காக அடிக்கல் நாட்டினார். கடந்த மாதம் இப்பணி முடிவடைந்த நிலையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கேசி. கருப்பண்ணன் ஏற்பாட்டில், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் பயன்பெறக்கூடிய விவசாயிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நேரில் சந்தித்து அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 60 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று 1650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நானே இப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். கொரோனா தொற்று காரணமாக ஓராண்டு காலம் தாமதமானது. அதிமுக ஆட்சியிலேயே 85 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றது.

திமுக ஆட்சியில் மெல்ல மெல்ல நகர்ந்து ஆமை வேகத்தில் திட்டம் முடிவு பெற்றுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க வரப்பிரசாதமான திட்டம். ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயனடைய கூடிய திட்டம். இத்திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்ததற்கு மணப்பூர்வமான மகிழ்ச்சி அடைகிறேன்.

சேலத்தில் 100 ஏரி நிரப்பும் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. தற்போது இத்திட்டம் திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

நிலம் எடுப்பு பணிகள் தாமதமாக நடக்கிறது. இது தொடர்பாக நான் சட்டமன்றத்தில் பலமுறை பேசியிருக்கிறேன். நீர்வளத்துறை அமைச்சரும் நேரில் பார்வையிட்டார்.

தற்போது மெல்ல மெல்ல 30 ஏரிகளுக்கு தண்ணீர் வந்துள்ளது. நில எடுப்பு பணிகள் 10 சதவீதம் தான் பாக்கி உள்ளது. துரிதமாக செய்து இருந்தால் 100 ஏரிகளும் முழுமையாக நிரப்பி இருக்கலாம்.

அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கு எங்கு கசிவு ஏற்படுகிறதோ அதை சரி செய்வார்கள் என்று தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

10 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

11 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

12 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

13 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

14 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

16 hours ago

This website uses cookies.