ஈரோடு மாநகர மாணவரணி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முருகானந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார்.
அவருக்கு ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. எனவே மாவட்ட செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக களமிறங்குவார் என கூறப்பட்டது.
முருகானந்ததும் அந்த ஆசையில் தான் இருந்தார். பின்னர் வேட்பாளர் செந்தில் முருகன் என அறிவிக்கப்பட்டதால் முருகானந்தம் அதிருப்தியடைந்தார்.
ஆனால் அதிமுகவில் ஏற்பட்ட மோதல், நீதிமன்றம் வரை எதிரொலித்தது. இதையடுத்து இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து வேட்பாளரை முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இபிஎஸ் தேர்வு செய்த வேட்பாளர் தென்னரசுவை ஆதரிப்பதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் ஒபிஎஸ் அணியில் இருந்த முருகானந்தம் தற்போது இபிஎஸ் அணியில் இணைந்துள்ளார்.
ஈரோட்டில் பரப்புரையில் ஈடுபட வந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்.
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
This website uses cookies.