அரூர் அருகே இளம்பெண் செல்போனுக்கு நிர்வாண படம் அனுப்பிய போலி சாமியாரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளுவபுரத்தை சேர்ந்த மனோகரன் வீட்டிற்கு கடந்த, 19-ம் தேதி வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னதுரை வந்துள்ளார்.
இவர் தன்னை சாமியார் என அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களது வீட்டின் பின்புறம் செய்வினை செய்து வைத்துள்ளனர். இதனால் உங்க குடும்பத்திற்கு ஆபத்து வரும் என கூறியுள்ளார்.
மேலும் அதனை பூஜை செய்து எடுத்து விடலாம் என கூறியுள்ளார். இதனை நம்பிய மனோகரன் பூஜை செய்ய ஒப்புக் கொண்டு பூஜை பொருட்கள் வாங்க சின்னதுரையை இருசக்கர வாகனத்தில் அரூருக்கு அழைத்துக் சென்றுள்ளார்.
அப்பொழுது மனோகரன் காவல் துறையிடம் தன்னை பிடித்து கொடுத்து விடுவார் என்ற பயத்தில் சின்னதுரை இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மனோகரன் தப்பி ஓடிய சின்னதுரையை செல்போனில் தொடர்பு கொண்டு ஏன்? பூஜை செய்யாமல் சென்று விட்டீர்கள் என கேட்டுள்ளார்.
அப்போது, சின்னதுரை மனோகரனை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் போலி சாமியார் என தெரிந்து கொண்ட மனோகரன் வீடு திரும்பினார்.
அதன் பிறகு சிறிது நேரத்தில் மனோகரனின் மகள் செல்போனுக்கு ஒரு பெண்ணின் நிர்வாண படத்தை சின்னதுரை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனோகரன் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலி சாமியார் சின்னதுரை மீது புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் சின்னதுரையை நேற்று இரவு கைது செய்தனர். மேலும் முன்பின் தெரியாதவர்கள் வந்தால் பேச்சுக் கொடுக்க வேண்டாம் செல்போன் நம்பர் கொடுக்க வேண்டாம்.
பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். புதிய நபர்கள் சந்தேகப்படும் படி இருந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.