தமிழில் மந்திரம் செய்யச் சொல்லி புரோகிதர்களுக்கு நபர் ஒருவர் மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவில்களில் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியிலேயே அர்ச்சனை செய்யப்படும் வழக்கம் இருந்து வருகிறது. இப்படியிருக்கையில், தமிழகத்தில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.
அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற உத்தரவு இருந்தாலும், இன்னும் முழுமையாக இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், தமிழில் மந்திரம் செய்யச் சொல்லி புரோகிதர்களுக்கு நபர் ஒருவர் மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சில சாதிப் பெயர்களை சொல்லி, எங்களுக்கு தமிழ் தான் தெரியும், தமிழிலேயே மந்திரம் சொல்லுங்கள் என்று அந்த நபர் கூறுகிறார். மேலும், தமிழில் மந்திரம் சொல்லாவிட்டால் கல்லை கொண்டு அடிப்பேன் என்றும் அவர் மிரட்டுகிறார்.
இதனால், பூஜைக்கு வந்த புரோகிதர்கள் செய்வதறியாமல் திகைத்து போயினர். மேலும், முதலில் சமஸ்கிரத மொழியில் முடித்து விட்டு, பின்னர் தமிழில் சொல்வதாக அவர்கள் பதில் அளித்தனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த அந்த நபர், தமிழில் மந்திரம் சொல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.
ஒருகட்டத்தில் அமைதி காத்து வந்த அங்கிருந்தவர்கள் அந்த நபரை சமாதானம் செய்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த நபரின் இந்த செயலுக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பாஜக பெண் நிர்வாகியான காயத்ரி ரகுராம், இந்த வீடியோவை பகிர்ந்து, “ஏன் பிராமணர்களை பூஜைக்கு கூப்பிட்டு பதற்றத்தை உருவாக்குகிறார்கள்? பூஜை செய்ய அடுத்த முறை பெரியாரை அழைக்கவும். தமிழ் பூஜை பற்றி சொல்லி தமிழ் பூஜை செய்வார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.