காதலியை பார்க்க மாறுவேடத்தில் கல்லூரி விடுதிக்கு சென்ற இளைஞருக்கு நடந்த ஷாக் சம்பவம்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் தனியார் மருத்துவக் கல்விக் கல்லூரியின் மகளிர் விடுதியில் காதலியை சந்திக்க முயன்ற காதலன் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் சமையல் கலைஞராக பெங்களூரில் வேலைவாய்ப்பு பெற்று பணி புரிந்து வருகிறார்.
மேலும் படிக்க: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை… கருவூல அதிகாரி கைது : கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
இரண்டு வருடங்களுக்கு முன் கேரளாவில் படிக்கும் போது இருவரும் காதலித்தனர். இந்நிலையில் தன் காதலியை சந்திக்க பெங்களூருவில் இருந்து குப்பம் வந்த இளைஞர் பின்னர் பர்தா அணிந்து கொண்டு காதலியை சந்திக்க விடுதிக்குள் சென்றார்.
அந்த இளைஞரின் நடத்தையில் சந்தேகமடைந்த கல்லூரி ஊழியர்கள் சோதனை மேற்கொண்டு அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கல்லூரி துணை முதல்வர் அருண்குமார் அளித்த புகாரின் பேரில், குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலியை பார்க்க வந்த காதலனை போலீசார் அழைத்து சென்ற சம்பவம் கல்லூரி விடுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.