பாஜகவுடன் இன்றைக்கும் கூட்டணி இல்லை, என்றைக்கும் இல்லை : அதிமுக அறிவிப்பு.. அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு!!
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக இடையே உச்சகட்ட மோதல் நிலவி வரும் நிலையில், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாஜக – அதிமுக இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இன்று ஆலோசனை கூட்டத்தில் முக்கியமான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதிமுகவில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்றும் மற்றொரு தரப்பின் கூட்டணியை முறிக்க வேண்டும் எனவும் மாறுபட்ட கருத்து இருப்பதால், இறுதி கட்ட முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்தார்.
எனவே, கூட்டணி முறிவு அல்லது கூட்டணி தொடர பாஜகவுக்கு நிபந்தனை விதிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், பாஜக கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. பாஜக கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக தொடர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளை கூறியதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து, இபிஎஸ் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது.
இந்த நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது என அறிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் தலைமையிலான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேபி முனுசாமி, பாஜக உடனான கூட்டணி முறிந்து விட்டதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய கட்சி அதிமுக தான் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
This website uses cookies.