டிரெண்டிங்

பன்னுக்கு GST இல்ல..ஆனா CREAMக்கு GST போடறீங்க.. என்ன மேடம் இப்படி? நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்த தொழிலதிபர்!

கோவை கொடிசியா வளாகத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகளின் கோரிக்கைகளை டெல்லியில் இருந்து வந்திருந்த வருமான வரி துறை, ஜி.எஸ்.டி , கஸ்டம்ஸ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் மனுவாக அளித்தனர்.

இதனைதொடர்ந்து கொடிசியா வளாகத்தில் சிறு,குறு தொழில் முனைவோர் , பஞ்சாலை உரிமையாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துரையாடினார்.

இதில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து துறைகளை சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்றனர். கொடிசியா மற்றும் லகு உத்யோக் பாரதி தொழில் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் பங்கேற்றார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் தங்களது கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து தொழில் முனைவோர் மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மேடையில் பேசியபோது, மக்களின் குறைகளை கேட்பது அதிகாரிகளின் கடமை.

அதிகாரிகளிடம் ஒரு வார்த்தை சொன்ன நிலையில் அதிகாரிகள் இன்று வந்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்று இருக்கின்றனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்

ஜி.எஸ்டி, கஸ்டம்ஸ், வருமான வரித்துறை, MSME, iob, canara வங்கி அதிகாரிகள் என பல துறை அதிகாரிகள் இன்று வந்திருக்கின்றனர் எனவும், கொடுக்கப்பட்ட மனு ஒவ்வொன்றுக்கும் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொழில்துறையில்1500 சட்டங்களை களைந்து எடுத்து இருக்கின்றோம். 40 ஆயிரம் புகார்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவைக்கு அட்டல் இன்னோவேசன் மிஷன், டிபன்ஸ் காரிடர் போன்றவை செயல்படுத்த படுகின்றது எனவும், தொழில் வளர்ச்சிக்கு நல்ல அனுகூலமான மண்டலம் கோவை என தெரிவித்தார்.

கொடிசியா அமைப்பு அரசின் திட்டங்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கின்றது என தெரிவித்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிட்பி வங்கி கிளையினை கோவை குறிச்சி பகுதியில் திறந்துள்ளதை கூறிய அவர், 163 முக்கிய கிளஸ்டர்கள் இருக்கும் இடங்களில் சிட்பி குறித்து விசாரித்து இருப்பதாகவும், அடுத்த 3 வருடத்தில் 70 இடங்களில் கிளைகள் திறக்க சிட்பி முடிவு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.

கோவையில் மேலும் ஒரு சிட்பி கிளை வர இருக்கின்றது என தெரிவித்த அவர்,கோவையில் ஏற்கனவே திறக்கப்பட்ட சிட்பி கிளையில் ஒரு வருடத்தில் 491 கோடி ரூபாய் வங்கி கடன் கொடுக்க தீர்மானம் செய்து 314 கோடி கொடுக்கப்பட்டுள்ளது எனவும், இது தவிர்த்து அனைத்து நடவடிக்கையும் மொத்ததாக சேர்த்து 620 கோடி வரை கடன் கோவை சிட்பி கிளை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

மைக்ரோ தொழில்களுக்கு சிட்பி வங்கி கிளையில் கடன் கொடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.இந்த பட்ஜெட்டில் சிறு,குறு தொழில்களுக்கு பல சலுகைகள் , திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதை எல்லா இடங்களிலும் சென்று தெளிவு படுத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.மேலும் தமிழகத்திற்கும் கோவைக்கும் எந்தெந்த மாதிரியான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை பட்டியலிட்டவர், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு எதுவுமே வரவில்லை என சொல்பவர்களுக்காக இதை சொல்கின்றேன் என தெரிவித்தார்.

தொழில்துறையினரிடம்அதிகாரிகள் மனுக்களை வாங்கி இருன்றனர். டெல்லி சென்றதும் இது குறித்து அதிகாரிகளிடம பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.ஜிஎஸ்டி கோரிக்கைகள் குறித்த விவகாரம் தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் கட்டாயம் பேசுகின்றேன் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொழில் துறையினர் மத்தியில் வாக்குறுதி அளித்தார்.

முன்னதாக ஹோட்டல் உரிமையாளர்,மிக்சர், ஸ்வீட்,மற்றும் உணவு க்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என நகைச்சுவையாக பேசி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

1 hour ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

1 hour ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

1 hour ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

2 hours ago

அஸ்திவாரம் தோண்டும் போதே அபசகுணம்.. புதிய கட்டிடத்துக்காக காவு வாங்கிய பழைய கட்டிடம்!

கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…

2 hours ago

This website uses cookies.