டிரெண்டிங்

முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் : அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு.. குவியும் கண்டனம்!

சென்னை அசோக நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் ஒரே நேரத்தில் சொற்பொழிவு நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் மகாவிஷ்ணு என்பவரை சொற்பொழிவு நடத்த அழைத்துள்ளனர்.

தன்னை உணர்ந்த தருணங்கள் என்ற தலைப்பில் அவர் மாணவர்கள் மத்தியில் கருத்துக்களை கூறியுள்ளார்.

உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என தெரிவித்ததோடு மறுபிறவு குறித்து மாணவர்கள் மத்தியில் பேசினார்.

முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என பேசிய மகா விஷ்ணுவின் பேச்சை கேட்ட அங்கிருந்த ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அவர்களுடன் மகா விஷ்ணு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து அஅரசு பள்ளிகளில் இது போன்ற நிகழ்வுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் மகா விஷ்ணுவின் கருத்துக்கு கண்டனம் வலுக்கிறது.

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார்? சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தாரா? அல்லது தன்னிச்சையாக இவர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டாரா? என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

9 hours ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

10 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

11 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

11 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

12 hours ago

This website uses cookies.