சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு தற்போது தகுதி வாய்ந்த மகளிருக்குத்தான் அளிக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த தகுதி என்னவென்று தெரியவில்லை.
ஒவ்வொருத்தரும் மது வாங்குவதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஏனெனில் அவர் எப்படி இறக்கிறார் என்பது அப்போது தான் தெரியும். குடியால் இறந்தார் என்றால் அரசாங்கம் அவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த உரிமைத்தொகைக் கொடுக்கும் போது அதிகமாக டாஸ்மாக் செலவு செய்யும் ஆண்மகன்களின் வீடுகளில் உள்ள மகளிருக்கு தான் முதலில் உரிமைத் தொகையை வழங்க வேண்டும்.
ராகுல் காந்தி தகுதிநீக்கம் விவகாரத்தைப் பொறுத்தவரை, பிரதமரை அவர் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை, மோடி என்ற குறிப்பிட்ட சமுதாயத்தை அவர் விமர்சனம் செய்துள்ளார் என்பது தான் இந்த வழக்கின் அடிப்படை.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சாதி ரீதியாக யாரையும் விமர்சிக்கக் கூடாது என்பதே அடிப்படை. அதனால் தான் அவர் மீது இந்த வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரமதரை விமர்சித்தால் இந்த தண்டனை என்பது போல கொண்டு போவது சரியல்ல என்றார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.