பேரிடர் இல்லைனு சொன்னாங்க.. ஆனா இப்ப ஆய்வுக்கு வந்திருக்காங்க : நிதியமைச்சர் அறிவிப்புக்காக வெயிட்டிங் : அமைச்சர் உதயநிதி!
கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. படிப்படியாக வெள்ளம் வடிந்து வரும் நிலையில், மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை.
பின்னர் தேசிய பேரிடர் மீட்புக்குழு மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். அதே போல மத்திய மாநில அரசுகள் நிவாரணம் பொருட்களும் வழங்கின.
பாதிக்கப்பட்ட மக்களக்கு தமிழக அரசு சார்பாக நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் தூத்துக்குடிக்கு வந்துள்ளார்.
தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், தூத்துக்குடி மாநகர பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரண பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் நிதியமைச்சரின் வருகை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பேரிடர் நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்குள் மோதல் போக்கு இல்லை என கூறிய அவர், முதலில் பேரிடரே இல்லை என நிதியமைச்சர் சொன்னார், தற்போது ஆய்வுக்காக வந்துள்ளார். ஆய்வு முடித்த பின் அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பதாக கூறினார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.